×

கொடநாடு கொள்ளை வழக்கில் மருது அழகுராஜிடம் விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மருது அழகுராஜிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில், மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர், டிஐஜி முத்துச்சாமி தலைமையிலான தனிப்படை போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று அதிமுக கட்சி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என தெரிகிறது. கொடநாடு பங்களாவில் நடந்த பல்வேறு விஷயங்கள் இவருக்கு தெரியும் என போலீசார் கருதுகின்றனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்களை எடுக்க ஆர்வம் காட்டியது குறித்து இவரிடம் விசாரிக்கப்பட்டது. பங்களாவிற்கு சென்று வரும் நபர்கள், ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற நபர்கள், பங்களாவில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் குறித்த தகவல்களை மருது அழகுராஜிடம் போலீசார் கேட்டதாக தெரிகிறது. …

The post கொடநாடு கொள்ளை வழக்கில் மருது அழகுராஜிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Marudu Awakuraj ,Kodanadu ,Marudu Sadhakuraj ,Nilgiri District ,Marudu Nyukuraj ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...